• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட 3 ஆவது இஸ்த்தான்புல் சர்வதேச நீர் கருத்தரங்கு

- நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையின் கீழ் பிரதிநிதிகள் குழுவொன்று மேற்போந்த கருத்தரங்கில் கலந்துகொண்டது. நீர் பாதுகாப்பு மற்றும் நீர் பற்றிய சட்ட ஏற்பாடு போன்ற விடயங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் மையப்படுத்தப்பட்டிருந்ததோடு, நீர் தொழில்சார்பாளர்கள், கல்விமான்கள், விஞ்ஞானிகள், சருவதேச அமைப்புகள் என்பன இதில் கலந்து கொண்டன. இந்த பிரதிநிதிகள் குழுவானது ஆசிய வலயத்தின் நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு பிரச்சினைகள் பற்றியும் அதேபோன்று புத்தாயிரம் ஆண்டு அபிவிருத்தி குறியிலக்கு பற்றியும் ஒரு பொதுவான அனுகுமுறைக்கு வருவது சம்பந்தமாகவும் உடன்பாட்டுக்கு வந்தது. மேற்போந்த தகவல்கள் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.