• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வங்கியின் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் உடன்படிக்கை உறுப்புரைகளைத் திருத்துதல் மற்றும் 2010 ஆம் ஆண்டில் விருப்பு முதலீட்டை அதிகரிக்கும் பொருட்டு பங்களிப்பு தொகையைச் செலுத்துதல்

- சருவதேச நிதிக் கூட்டுத்தாபனம் என்பது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தனியார்துறை அபிவிருத்திக்கும் அதுசார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதற்கும் முதலீடு மற்றும் மதியுரைச் சேவைகளை வழங்கும் உலக வங்கியின் அபிவிருத்தி நிதி நிறுவனமாகும். மேற்போந்த உடன்படிக்கையின் பிரிவுகளை திருத்துவதற்கும் இலங்கை உரிமை பெறும் பங்குகளுக்கு பங்களிப்புத் தொகை வழங்குவதற்குமாக பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.