2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெரும்பாக கொழும்பு கழிவுநீர் கருத்திட்டம் - தெஹிவளை - கல்கிச்சை, கொலன்னாவ பிரதேசங்களிலுள்ள 06 கழிவுநீர் பம்பு நிலையங்களின் புனரமைப்புக்கும் ஆற்றல் அளவை அதிகரித்தல் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்போந்த கருத்திட்டத்திற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 7,795,674.05 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |