• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சருவதேச உறவுகள், திறமுறை ஆய்வுகள் தொடர்பான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் பல்கேரியா குடியரசின் வெளிவிவகார அமைச்சரின் இராசதந்திர நிறுவகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமானது பல்கேரியாவுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வினைப் பெற்றுக் கொள்தவற்கு பங்களிப்பு நல்கும் செயற்பாடுகளை மேம்படுத்துவதும் அவற்றிற்கு ஒத்தாசை நல்குவதாகும். மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.