• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி முறிகளின் மீது உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தின் மூலம் நடை முறைப்படுத்தப்படுகின்ற நான்கு முன்னுரிமை நீர்வழங்கல் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 29.1பில்லியன் ரூபாவைக் கொண்ட ஆகுசெலவில் 30 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10.095 பில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த முதலீட்டில் பின்வரும் மேலதிக முன்னுரிமைக் கருத்திட்டங்கள் நான்கினை நடைமுறைப்படுத்துவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பொதி 2 - கொழும்புக்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்கள் - நிலக்கீழ் தொட்டி, பிரதான நீர்க்குழாய் வழங்கல், பதித்தல் உட்பட ஏனைய சிவில் வேலைகள்;

* பொதி 3 - கொழும்புக்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்கள் - ஹோமாகம, பாதுக்க, சீத்தாவக்க பிரதேச செயலகப் பிரிவுகள் விநியோக முறைமை உட்பட நீர்க்குழாய் வழங்கல் மற்றும் குழாய் பதித்தல்;

* கொஸ்கம - அவிசாவலை கூட்டு நீர்வழங்கல் கருத்திட்டம்; அத்துடன்

* மெதிரிகிரிய விநியோக கட்டம் II .