• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் தற்போது நடைமுறைப்படுத்தும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆரம்பித்து பலம்மிக்கதாக நடாத்திச் செல்வதற்கான ஐந்து வருடகால திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கோரல்

- சிறுபராயத்திலிருந்தே பாடசாலை பிள்ளைகளிடம் சுற்றாடல் நற்புறவுமிக்க எண்ணங்களை மேம்படுத்துவதன் மூலமும் அவர்களை சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலமும் அவர்களின் அறிவு, புரிந்துணர்வு உட்பட ஆற்றல் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடாக நாட்டிலுள்ள பல பாடசாலைகளில் "சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டங்கள்" நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளாவது சுற்றாடல் பொறுப்புகளினால் கட்டுப்பட்ட வாழ்க்கை முறைக்கு மாணவர்களை பயிற்றுவிப்பதும், நாட்டின் சுற்றாடலை பாதுகாக்கும் சிறந்த பிரசைகளை உருவாக்குவதும் பாடசாலை மாணவர்கள் ஊடாக பெரியோர்களிடத்தில் சுற்றாடல் பாதுகாப்புச் செய்தியை கொண்டு செல்வதுமாகும். சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.