2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உயர் கல்வியின் தரத்தினை உறுதிப்படுத்துவது தொடர்பிலான வலய செயலமர்வுக்கு ஒருங்கிணைவாக ஆசிய பசுபிக் வலயத்தின் உயர் கல்லி தகைமைகளை ஏற்றுக் கொள்தல் என்னும் தலைப்பிலான வலயக் குழுவின் 13 ஆம் கூட்டத்தொடருக்கு அனுசரணை வழங்குதல் - 2014 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ள மேற்போந்த கூட்டத் தொடரின் அனுசரணை வழங்கும் வாய்ப்பினை பெங்கொக் யுனெஸ்கோ நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடருக்கு சருவதேச ரீதியில் சுமார் 60 பேர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பாரக்கப்படுகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் ஆசிய பசுபிக் வலய மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து கல்விசார் தொழில்சார்பாளர்களினதும் கல்விசார் கல்விமான்களினதும் கவனம் ஈர்க்கப்படுவதோடு, இது இலங்கையின் உயர் கல்விக்கு மிகச் சிறந்த சருவதேச அங்கீகாரத்தை வழங்கும். இந்தக் கூட்டத் தொடரை இலங்கையில் நடாத்துவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |