• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் பல்கேரியா குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கான உடன்படிக்கை

- இந்த உடன்படிக்கைக்கு இருதரப்பு ஒத்துழைப்பின் சகல அமிசங்களும் ஏனைய முக்கிய விடயங்களும் அதாவது ஐக்கிய நாடுகளினதும் வேறு சர்வதேச ஒன்றியங்களினதும் நிகழ்ச்சி நிரல் தொடர்பிலான பிரச்சினைகள், சர்வதேச பிணக்குகள் அமைதியானவாறு தீர்வொன்றைக் காண்பது தொடர்பிலான பிரச்சினைகள், வளிமண்டலவியல் மாற்றங்கள், சுற்றாடல் பாதுகாப்பு திறமுறை அபிவிருத்தி போன்ற உலகளாவிய பிரச்சினைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.