2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை அரசாங்கத்துக்கும் பங்களாதேஷ் அரசாங்கத்துக்கும் இடையில் மருத்துப் பொருட்களின் கொள்வனவுகள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கை மருத்துவ கொள்வனவுகளுக்காக வருடாந்தம் அண்ணளவாக 30 பில்லியன் ரூபாவை செலவு செய்வதுடன், இதில் 17 பில்லியன் ரூபா மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக செலவு செய்யப்படுகின்றது. உள்நாட்டு மருந்து உற்பத்தியின் மூலம் அண்ணளவாக தேசிய மருந்துத் தேவைப்பாட்டின் 10% - 15% வழங்கப்படுவதுடன், மீதி அரசாங்க மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் உலகம் பூராவும் கோரப்படுகின்ற கேள்வி மூலம் கொள்வனவு செய்யப்படுகின்றது. இலங்கை மக்கள் தாங்கிக் கொள்ளக்கூடிய விலைக்கு தனிச்சிறப்புடன் சிறந்த மருந்து வழங்கலை தடையின்றி வழங்கும் நோக்கில் இருநாடுகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |