2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சுக்கிடையிலான தொழிற்பாட்டுக் குழுவொன்றைத் தாபித்தல் - ஒழுக்கமிக்க மற்றும் சட்டத்தை மதிக்கின்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கும் ஏனைய இயைபுள்ள அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் முனைப்புடனான பங்களிப்புடன் சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சின் பொலிஸ் திணைக்களத்தினதும் விசேட அதிரடிப்படையினதும் கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சுக்கிடையிலான தொழிற்பாட்டுக் குழுவொன்றை தாபிப்பதற்கு சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |