2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குற்றத்தடுப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ரஷ்யா கூட்டரசாங்கத்தின் உட்துறை அமைச்சுக்கும் இலங்கையின் சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சிற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடல் - பயங்கரவாதம், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் எதிரான குற்றங்கள், ஊழல், போதைப்பொருள் வியாபாரம், மனித வியாபாரம் மற்றும் கறுப்புப் பணத்தை புழக்கத்தில் விடுதல் போன்ற கடுங்குற்றங்களுக்குரிய தகவல்களை பரிமாற்றிக் கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை விருத்தி செய்வது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |