2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறந்த தொழில், தொழிலுக்காக புலம் பெயர்பவர்களினதும் இலங்கையிலுள்ள அவர்களுடைய குடும்பங்களினதும் பாதுகாப்பு உட்பட நல்லொழுக்கம்" என்னும் தொழிலுக்காக புலம்பெயரும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கையில் மொத்த புலம்பெயர் ஊழியர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1.7 மில்லியன் என்பதுடன், 2012 ஆம் ஆண்டில் புலம்பெயர் ஊழியர்களினால் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்த தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் (827 பில்லியன் ரூபா). புலம்பெயர் ஊழியர்களின் குடும்பங்களுக்கு சிறந்த நலனோம்புகை வசதிகளை வழங்குவதற்கும் நாடுதிரும்பிய புலம்பெயர் ஊழியர்களை மீள அங்கமாக சேர்க்கும் நோக்கில் நன்கொடைகளை வழங்கும் சர்வதேச முகவராண்மைகளின் ஒத்துழைப்புடன் தொழிலுக்காக புலம்பெயர்வோருக்கான தேசிய கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |