2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் பிரசுரித்தல் - உயர்தரத்தில் இல்லாத பீடைகொல்லி வகைகளை பதிவு செய்வதை ஊக்குவிக்காமல் இருக்கும் நோக்கில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக இந்த வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |