• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர்களின் நலன்புரி நிதியமொன்றைத் தாபித்தல்

- முழுமையாக கலைப்படைப்புக்களிலும் தொழில்ரீதியாகவும் ஊடக நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்பொழுது ஓய்வு பெற்றுள்ள வயதுமுதிர்ந்த கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர்களின் நலன்புரி நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நிதியமொன்றைத் தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை ஆக்குவதற்கு சட்டவரைநருக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.