2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறன் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (IDA) ஏற்கனவே பெறுவதற்கு உடன்பட்டுள்ள விசேட எடுத்தல் உரிமை 53.7 மில்லியன் ரூபா கடன்தொகைக்கு மேலதிகமாக விசேட எடுத்தல் உரிமை 12.0 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளல் - இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் தேர்ச்சி அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக 53.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட விசேட எடுத்தல் உரிமையை (83 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) பெற்றுக் கொள்வதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்துடன் கடன் இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சருவதேச அபிவிருத்தி சமவாயத்தினால் மொத்த பங்களிப்பாக 65.7 மில்லியன ரூபாவாக (101.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) இந்த நோக்கத்திற்காக மேலும் 12 மில்லியன் ரூபாவைக் கொண்ட (விசேட எடுத்தல் உரிமை) தொகையொன்றை வழங்குவதற்கும் தற்போது ஒத்துக் கொண்டுள்ளது. இந்த கடன் உடன்படிக்கையுடன் தொடர்புற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |