• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தகவல் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்துறையை மேம்படுத்துவதற்கான நிருமாணிப்பு - புதிய பட்ட பாடநெறிகளை அறிமுகப் படுத்துவதற்குத் தேவையான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் - களனி பல்கலைக்கழகம்

- இயைபுள்ள துறையில் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழிநுட்ப தொழில்சார்பாளர்களுக்காக நிலவும் தேவையை நிறைவு செய்வதற்காக பல்கலைக்கழகங்களில் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழிநுட்ப மற்றும் இதற்குரிய புதிய பட்ட பாடநெறிகளையும் தொழினுட்பம் சார்ந்த உயர் கல்வி வசதிகளையும் மேம்படுத்தும் அவசரத் தேவையானது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக களனி பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப முகாமைத்துவ கல்வி பிரிவினால் மென்பொருள் பொறியியல் பற்றிய விஞ்ஞான பட்டம் மற்றும் முகாமைத்துவம், தகவல் தொழிநுட்பவியல் பட்டம் ஆகிய மூன்று புதிய பட்டப்பாட நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கும் திறந்த மென்பொருள் அபிவிருத்தி, மென்பொருள் தீர்வுகள் உட்பட பராமரிப்பு என்பன சார்ந்த தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்திற்காக மாணவர்களுக்கு நடைமுறை அறிவினை வழங்குவதற்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழிநுட்ப நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. களனிய பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா கொண்ட மொத்த செலவில் மாடிக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.