2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சட்டம், ஒழுங்கு தொடர்பிலான ஆலோசனை சபையொன்றை நிறுவுதல் - ஒழுக்கம் மிக்க அத்துடன் சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கும் பொருட்டு சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சின் விடயநோக்கெல்லையைத் தழுவும் விதத்தில் கொள்கை மற்றும் திட்டங்களை வகுத்தமைப்பதற்குத் தேவையான நிபுணத்துவ அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக சட்டம், ஒழுங்கு தொடர்பிலான ஆலோசனை சபையொன்றை நிறுவுவதற்காக சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |