• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை மின்வலு அபிவிருத்தி மற்றும் எரிசக்தி வினைத்திறனை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- பிரேரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் வலுசக்தி துறை முதலீட்டில் பசுமை மின்வலு துறையின்பால் கவனம் செலுத்தப்படுவதோடு, மீள் புதுப்பித்தல் சக்தி உற்பத்தியின்பால் தனியார்துறையின் முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் இது உதவும். பிரேரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் I கட்டத்தில் பின்வரும் நிருமாணிப்புப் பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன :

* மொரகொல்லையில் 30 மெகாவொட் நீர்மின் நிலையமொன்றை தாபித்தல்.

* கெரவலபிட்டிய (கி.வொ.220/33), கப்பல் துறை (கி.வொ.220/132/33), களுத்துறை, கெஸ்பாவ (கி.வொ.122/33) ஆகிய இடங்களில் புதிய நெய்யறி உபநிலையங்கள் நான்கினை நிருமாணித்தல் அது சார்ந்த வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேற்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் கட்டுநாயக்கா மற்றும் பழைய அநுராதபுரம் (கி.வொ.132/33) நெய்யறி உபநிலையங்களை அபிவிருத்தி செய்தல்.

* கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வவுணதீவு, மாதம்பே பிரதேசங்களில் 33 கிலோ வொட் அணுப்பீட்டு வழிகளை நிருமாணித்தல்.

* பௌதிக முதலீட்டின் கீழ் கொழும்பு நகரத்தில் முன்னோடி உப கருத்திட்டங்களை நிருமாணித்தல்.

கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்திற்காக அரசாங்கத்தினால் 40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட பங்களிப்பு வழங்கப்படுவதோடு மீதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடனாக வழங்கப்படவுள்ளது. செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கை சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.