2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெலியத்த மாவட்ட வைத்தியசாலையை விசேட மகப்பேறு சிறுவர் வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்தல் - 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் தென்கிழக்கு பிரதேசத்தில் மகப்பேறு, சிறுவர் சுகாதார சேவைகளுக்காக விசேட அரசாங்க வைத்தியசாலையொன்றை தாபிப்பது நீண்டகாலமாக நிலவிய தேவையொன்றாகும். மேற்போந்த நோக்கத்தை அடையும் பொருட்டு பெலியத்த மாவட்ட வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு தேவையான கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நெதர்லாந்து வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப் பேச்சுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடன் வசதிகளை பெறுவதற்காக நெதர்லாந்து வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |