2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2014 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியை "ஶ்ரீமத் அநகாரிக தர்மபால தினம்" எனப் பெயரிடல் - ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 150 ஆவது ஜன்ம தினம் 2014 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று வருவதோடு இதைக் கொண்டாடுவதற்காக பிரதம அமைச்சரின் அலுவலகம், புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சு, வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரோக்களும் பல்வேறுபட்ட மதம் மற்றும் பிற அமைப்புகளும் கூட்டுமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2014 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியை "ஶ்ரீமத் அநகாரிக தர்மபால தினம்" என பிரகடனப்படுத்தும் பொருட்டு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |