2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உடுபத்தாவ பிரதேச செயலகத்திற்காக புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல் - உடுபத்தாவ பிரதேச செயலகத்திற்காக 38.06 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் இந்த நோக்கத்திற்கான நிதி 2015 ஆம் ஆண்டில் குருநாகல் மாவட்ட செயலாளரின் செலவுத் தலைப்பின் கீழ் குறித்தொதுக்கு வதற்குமாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ. ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |