• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக 3(2) ஆம் பந்தியின் கீழுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்கான அங்கீகாரம்

- பிரதேச வாழ் மக்களின் தற்போதைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது இந்தக் கருத்திட்டத்தின் குறியிலக்காகும். இந்தக் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் இந்த பிரதேசத்தில் 536 வீட்டு அலகுகளும் 100 வர்த்தக நிலையங்களும் வழங்கப்படுவதோடு, கட்டம் II இல் நவீன வசதிகளுடகாக வர்த்தக மற்றும் அலுவலக இடவசதிகள், வீட்டு அலகுகள், ஹோட்டல் போன்றவற்றை வழங்கும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாகும். பிரேரிக்கப்பட்டுள்ள முதலீடானது 429.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட (திருத்த) சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.