• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி முகத்திடலிலிருந்து கல்கிஸ்சை வரை கொழும்பு கடலோர பகுதியின் பாதுகாப்பும் அபிவிருத்திக்குமான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்காக M/s Boskalis International B.V மற்றும் M/s Aitken Spence PLC கம்பனிகளின் பிரேரிப்பு

- இந்த பிரேரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படுவது கொழும்பு கரையோரத்தின் காலி முகத்திடலிலிருந்து கல்கிஸ்சை வரை 10 கிலோ மீற்றர் பிரதேசத்தை பாதுகாப்பதும் அபிவிருத்தி செய்வதுமாகும். இந்தக் கருத்திட்டத்தின் மூலம் கொழும்பு மேற்கு கரையோரத்தின் பொருளாதார பெறுமதியும் புவியியல் மட்டமும் விருத்தியடைவதோடு, இது கரையோரப் பாதுகாப்பு, சமுத்திரவள முகாமைத்துவ திணைக்களத்தினதும் இலங்கை முதலீட்டு சபையினதும் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது 590 ஏக்கர் நிலப்பிரதேசத்தைத் தழுவும். இதன் தொடர் நடவடிக்கைகளுக்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.