• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் நீர் வள மூலங்களையும் நீர் ஒதுக்கங்களையும் நீர்த் தேக்கங்களையும் கங்கைகளையும் ஆறுகளையும் சிற்றாறுகளையும் பாதுகாத்தலும் பேணுதலும்

- விடயத்திற்குப் பொறுப்பான சகல அமைச்சுக்களிலிருந்தும் திணைக்களங்களிலிருந்தும் முகவராண்மைகளிலிருந்தும் பொது மக்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் பாராளுமன்ற மதியுரைக்குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவொன்றினால் நீர் வளமூலங்களைப் பாதுகாத்தல், பேணுதல் தொடர்பிலான தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.