2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கை - இந்த தேசியக் கொள்கையின் பிரதான நோக்கமாவது தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றாடலின் விருத்தியின் பொருட்டு தலையிடும் சகல முக்கிய தரப்பினர்களின் அதாவது, அரசாங்க, தனியார்துறை உட்பட தொழிற்சங்கங்களின் உதவியுடன் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குவதாகும். இந்தக் கொள்கையின் குறியிலக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின்பால் ஈர்க்கப்பட்ட கலாசாரமொன்றை நாட்டில் மேம்படுத்துதல் தொழில்சார் இடையூறுகள் மற்றும் நோய்களைத் தடுத்தல், தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பான சுகாதாரம்மிக்க சூழலை மேம்படுத்துதல், சேவை புரிந்துகொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட அத்துடன் தொழில்சார் நோய்களுக்கு ஆளான ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்குதலும் புனர்வாழ்வளித்தலுமாகும். இதற்கமைவாக முக்கிய சகல தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்டதும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மாண்புமிகு காமினி லொக்குகே .அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டதுமான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |