2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மகாவலி கங்கை ஆற்றுப்படுகை சார்ந்த விவசாய குடியேற்றங்களில் கமத்தொழில் சமூகத்தை காலநிலை மாற்றங்களின் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றும் கருத்திட்டம் - இந்தக் கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாவது மகாவலி கங்கை ஆற்றுப்படுகைக்கு அண்மையில் மழைநீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் கமக்காரர்களுக்கு பயனுள்ள காணிப்பயன்பாடு மற்றும் நீர் வழங்கல் முகாமைத்துவத்தின் மூலம் பல்வேறுபட்ட நிலைபேறுடைய வாழ்வாதாரங்களின்பால் தொடர்புபடுத்தி காலநிலை மாற்றங்களின் பிரதிகூலமான பாதிப்புகளுக்குத் தக்கவாறு மாற்றுவதற்கு உதவிசெய்து அவர்களுடைய வாழ்க்கைமுறையைக் கட்டியெழுப்புவதாகும். சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு தொடர்பில் ஐக்கியநாடுகளின் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றும் நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட 7,989,727 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையை பயன்படுத்தி காலநிலை மாற்றங்களினால் பிரதிகூலமான பாதிப்புகளுக்கு உட்படும் சகல பிரதேசங்களையும் தழுவும் விதத்தில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |