2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீடித்த சிறுநீரக நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்கான பரிசோதனையும் இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கிளினிக்குகளை தாபித்தலும் - பதவிய, அரலகங்வில, பக்கமூன, ஹெட்டிபொல, பதவி ஶ்ரீபுர, தெஹியத்தகண்டிய, வெல்லவாய, திஸ்ஸமஹாராம, வவுனியா தெற்கு (மாமடு) சம்பத்நுவர, தங்கல்லை ஆகிய வைத்தியசாலைகளில் நீடித்த சிறுநீரக நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்கான பரிசோதனை கிளினிக்குகளை ஏற்படுத்துவதற்கும் இந்த கிளினிக்குகளின் நிருமாணிப்பு ஒப்பந்தங்களை மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு கையளிப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |