2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எஹலியகொட நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை உடைமையாக்குதல் - இந்த வலயத்திலுள்ள முக்கிய சேவை மத்திய நிலையமாக எஹலியகொட நகரத்தின் முக்கியத்துவம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வலய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எஹலியகொட நகரத்தை விஸ்தரிக்கும் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பிரேரிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைவாக மாணிக்கக்கல் வர்த்தகத்திற்கான விசேட பகுதி உட்பட வைத்தியசாலை சேவைகள், வங்கி, நிதி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளையும் தாபிப்பதற்காக சுமார் 16 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணி ஒதுக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சுற்றுப் பிரதேச மக்களுக்கு நலன் கிடைக்கும். மேற்போந்த காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |