2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொட்டாவ நகர அபிவிருத்திக்காக சிறுவர் நன்னடத்தை, பாதுகாவல் திணைக்களத்திற்குச் சொந்தமாகவுள்ள காணியை உடைமையாக்குதல் - நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொட்டாவ நகர அபிவிருத்திக்கான பாரிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இதில் வர்த்தகக் கட்டடத்தொகுதி, வர்த்தக நிலையம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகம் போன்றன உள்ளதோடு, பொது மக்களின் எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு ஏனைய நகர வசதிகளை வழங்குவதும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை ஆகியனவும் அவற்றின் வலய அலுவலகங்களை இந்த பிரதேசத்தில் தாபிக்கவுள்ளன. சுமார் 4 ஏக்கர் விஸ்தீரணமுடைய இந்தக் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |