2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு புதிய மூன்று (03) மாடிக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் - ஏற்கனவே இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு 696.163 மில்லியன் ரூபா செலவில் புதிய மூன்று (03) மாடிக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்கு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |