2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2014 உலக இளைஞர் மாநாட்டை நடாத்துதல் - ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் 2014 உலக இளைஞர் மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கு உரியதாக செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறுபட்ட சருவதேச இளைஞர் அமைப்புகளும் சிவில் சமூகத்தினரும் அவதானிப்பாளர்களாக கலந்து கொள்வதற்கு விருப்பத்தை தெரிவித்து அண்ணளவாக 3,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தெரிவுச் சபையினால் தெரிவு செய்யும் முறையொன்றின் மீது 350 சருவதேச இளைஞர் பிரதிநிதிகளும் 100 உள்நாட்டு பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த மாநாட்டுக்கு 11 நாடுகளின் இளைஞர் நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சர்களின் பங்களிப்பும் 53 நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. |