• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தைத் தாபித்தல்

- தேசிய கடற்றொழில் மற்றும் கப்பற்றொழில் பொறியியலாளர் நிறுவனத்திற்குப் பதிலாக இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கும் இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட இதற்குரியதான சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . இந்த பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கான பிரதான நோக்கங்கள் சில பின்வருமாறு -

* கடற்றொழில், சமுத்திர தொழினுட்பம் உட்பட இதற்குச் சமமான துறைகளில் பல்கலைக்கழக கல்வியை வழங்குதல்;

* இயைபுள்ள பிரதேசங்களில் மனிதவலு தேவையை பூர்த்தி செய்தலும் கடற்றொழில் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு உரியதான தொழில்சார் மற்றும் தொழினுட்ப கற்கைப்பாட நெறிகளுக்கான வாய்ப்புகளை வழங்குதல்;

* கடற்றொழில், சமுத்திரவியல் மற்றும் அதனோடிணைந்த துறைகளில் ஈடுட்டுள்ள ஆட்களுக்கிடையே கடற்றொழில், சமுத்திரவியல் மற்றும் சமுத்திரம் சார்ந்த பிரிவுகளுக்கு உரியதான அறிவுவை விரிவுபடுத்துதல்.