• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 மே மாதம் 26 ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் 05 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்தப்படும் இந்துசமுத்திர டூனா ஆணைக்குழுவின் பதினோராவது குழு அமர்வும் நிதி மற்றும் நிருவாக பணிகள் தொடர்புற்ற பதினோராவது நிலையியற் குழு அமர்வும் ஆணைக்குழுவின் பதினெட்டாவது கூட்டத்தொடரும்

- இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்ற இந்துசமுத்திர டூனா ஆணைக்குழு இந்துசமுத்திரம் மற்றும் அண்மையிலுள்ள கடலில் டூனா மற்றும் டூனா போன்ற விசேடமாக முகாமைத்துவ நோக்கம் கையளிக்கப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பாகும். இந்த ஆணைக்குழுவின் நோக்கமானது இந்த உறுப்பினர்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் கடற்றொழில் துறையில் நிலைபேறுடைய அபிவிருத்தியை ஊக்கப்படுத்துவதாகும். இந்த கூட்டத்தொடரின் அனுசரணையாளராகவும் அதனோடிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குமாக கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .