2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மனநல சுகாதார சட்டம் - இலங்கை மனநோய்க் கட்டளைச் சட்டம் (559 வது அத்தியாயம்) தற்போதைய மனநல சுகாதாரத்துடன் இணைந்த சட்டமாகுமென்பதுடன், இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து அதாவது 1871 ஆம் ஆண்டு நிலவிய மனநல குறைபாடு தொடர்பிலான எண்ணக் கருவினதும் கருத்தினதும் அடிப்படையில் அமைந்திருந்தது. அப்போதிருந்தே பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போதுள்ள கட்டளைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டிய தேவைப்பாடு இனங்காணப்பட்டது. இதற்கமைவாக புதிய சட்டமூலமொன்றை ஆக்குவதற்கு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்காக வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |