• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சுகாதார சேவைக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மேற்கத்தேய மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்

- அரசாங்க சுகாதார சேவைக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மேற்கத்தேய மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த செயற்பாட்டின் மூலம் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் எடுத்துச் செல்வதற்கும் செலவாகும் வெளிநாட்டு செலாவணி குறையும் என்பதுடன், இதன் முலம் மருந்துகளை களஞ்சியப்படுத்துவதற்குத் தேவையான இடவசதிகளும் குறையும்.