2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரச சேவையில் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையும் சமூகக் கலந்துரையாடலை மேம்படுத்துதலும் - அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கும் மக்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் தடையின்றி வழங்குவதற்கும் வலுவானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான அரசாங்க சேவையொன்று இருக்க வேண்டியது தீர்க்கமான காரணியென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஊழியர் / முகாமைத்துவ பிணக்குகளை தவிர்த்துக் கொள்ளுவதற்கும், தீர்த்துக் கொள்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ள பொறிமுறை அதிகாரபூர்வ / விசாரணை, தீர்வு, நடுத்தீர்ப்பு போன்ற மூன்று திறமுறையின் அடிப்படையிலாகும். சுகாதார அமைச்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கருத்திட்டத்தின் முன்னோடி கட்டமைப்பின் செயற்பாடுகளை ஏனைய சகல அமைச்சுகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சராகிய மாண்புமிகு ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |