• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் நகர அபிவிருத்திக் கருத்திட்டம்

- அரசாங்கத்தின் பத்துவருட கால நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தியின் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள முக்கிய வலயங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகருக்கு வருகின்ற பொதுமக்களின் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு சகல வசதிகளுடனும் கூடிய 38 அறைகளைக் கொண்ட வாடி வீடொன்றை நிருமாணிப்பதற்கு நகர அபிவித்தி அதிகாரசபையினால் பிரேரிக்கப்பட்டுள்ளது. வாடிவீட்டை நிருமாணிப்பதற்குத் தேவையான காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்கும் வாடிவீட்டின் நிருமாணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.