2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பதலே நீர்வழங்கல் முறைமை விருத்தி, வலுசக்தி சேமிப்புக் கருத்திட்டம் மற்றும் கொழும்பு கிழக்கு நகர நீர்வழங்கல் கருத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கடன் வசதி - நகரவாழ் மக்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக நீர் வழங்குவதையும் துப்பரவேற்பட்டுச் சேவைகளை உறுதிப் படுத்திக் கொள்ளும் பொருட்டும் பெரும்பாக கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் கருதியுள்ளது. அம்பதலே நீர்வழங்கல் முறைமை விருத்தி, வலுசக்தி சேமிப்புக் கருத்திட்டத்திற்கும் கொழும்பு கிழக்கு நகர நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கும் பிரான்சினால் 100.86 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதி வழங்கப்படவுள்ளதுடன், மீதித் தொகையான 36.24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வகிக்கப்படுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |