• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அணை பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டத்தின் மேலதிக நிதியிடல் தேவையை பூர்த்திசெய்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (IDA) 83 மில்லியன் ஐ.அ.டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்தல்

- நாட்டின் வடக்கு கிழக்கில் சில பிரதேசங்களில் உள்ள வாய்க்கால்களை புனரமைப்பதற்கும் நவீன மயப்படுத்துவதற்குமான கருத்திட்ட நடவடிக்கைகளுக் கான நிதி ஏற்பாடுகளுக்கு மேலதிக நிதியாக 83 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேற்போந்த கருத்திட்டத்திற்கு வழங்குவதற்கு ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடன்தொகையை பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.