• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறன் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (IDA) 83 மில்லியன் ஐ.அ.டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்தல்

- அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி செல்லும் பயணத்தில் முக்கிய பணியை நிறைவேற்றுகின்ற தொழினுட்பம், வாழ்க்கைத்தொழில், பயிற்சி (TVET) சிறுபராய அபிவிருத்தி தொடக்கம் உயர் கல்வி வரை ஒருங்கிணைந்த செயற்பாடாக மனித மூலதனத்திற்கு முதலீடு செய்வதற்குள்ள முக்கியத்துவம் அரசாங்க அபிவிருத்திக் கொள்கை கட்டமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டாகும் போது உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையின் கேள்விகளுக்கு ஏற்றவாறு வினைத்திறன் ஆற்றல் விருத்தி முறையைக் கட்டியெழுப்புவதற்கு திறமுறை கட்டமைப்புகளை வழங்குகின்ற இடைநேர்விளைவான ஆற்றல் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் (SSDP) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பு விசேட எடுத்தல் உரிமைக்குச் சமமான 83 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையை வழங்குவதற்கு ஒத்துக் கொண்டுள்ளது. இந்தக் கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.