• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிக்குமார் காவறைத் தொகுதியின் நிருமாணிப்பு (கட்டம் I)

- அநுராதபுரம் நகரத்திலும் அதற்கருகாமையிலுள்ள விஹாரைகளிலும் வசிக்கின்ற பிக்குமார்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் பொருட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடாத்திச் செல்லப்படுகின்ற பிக்குமார்களுக்கான விசேட காவறை இடிந்துவிழும் நிலையிலுள்ளது. 59,787,498,85 ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய பிக்குமார் காவறைக் கட்டடத்தொகுதியொன்றை கீழ்மாடியிலும் முதலாம் மாடியிலும் நிருமாணிப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட நிருமாணிப்பு நடவடிக்கைகளை அரசாங்க நிறுவனமொன்றாகிய மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.