2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டனை அனுபவிக்கும் ஆட்களை கையளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் வியட்நாம் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கை - இலங்கை நீதிமன்றத்தினால் தவறொன்றுக்கு குற்றவாளியாக்கப்பட்டு மறியற் தண்டனை வழங்கப்படும் வேறு நாட்டுப் பிரசைகளுக்கு அவர்களது தண்டனையை அவர் பிரசையாகவுள்ள நாட்டினுள் அந்த தண்டனையை அனுபவிப்பதற்கான ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளைப் பொறுப்புக் கொடுக்கும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, ஏதேனும் நாடொன்றில் ஏதேனும் தவறொன்றுக்குக் குற்றவாளியாக்கப் பட்டு மறியற் தண்டனை வழங்கப்படும் இலங்கை பிரசையொருவருக்கு அவரது மீதி சிறைவாசக் காலத்தை அனுபவிக்கும் பொருட்டு இலங்கைக்கு கையளிப்பதற்கும் இந்த சட்டத்தில் இதற்குச் சமமான ஏற்பாடுகள் உள்ளது. வியட்நாமின் பொது மக்கள் பாதுகாப்புத் தொடர்பிலான அமைச்சரின் எதிர்கால இலங்கை விஜயத்தின் போது மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |