• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டம்

- துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சு மேல் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலைகளின் 26.13 கிலோ மீற்றர்களை 22.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த செலவில் தரமுயர்த்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இனங்கண்டுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான ஒபேக் நிதியம் 17 மில்லின் அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையை மேற்போந்த கருத்திட்டத்திற்கு வழங்குவதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. மேற்போந்த கடனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சர்வதேச அபிவிருத்திக்கான ஒபேக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.