• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிக் கடன்களைப் பயன்படுத்தி முன்னுரிமை வீதிகளைப் புனரமைத்தல்

- பின்வரும் வீதிப் பகுதிகளை புனரமைப்புச் செய்வதற்காக கடன் தொகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உள்நாட்டு வங்கிகளுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை வீதியின் கலேவெல தொடக்கம் தம்புள்ள வரையிலான (கி.மீ.14) வீதியின் பகுதியைப் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்; அத்துடன்

* கோட்டே - போபே (B 240) வீதியின் கி.மீ. 0.00 தொடக்கம் கி.மீ.3.70 வரையும் பத்தரமுல்ல - பன்னிபிட்டிய (B47) வீதியின் கி.மீ. 0.00 தொடக்கம் கி.மீ.3.50 வரையிலான வீதியின் ஒரு பகுதியையும் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்.