• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரியா ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படுகின்ற கடன் தொகையின் மூலம் இலங்கையில் திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்கான உசாத்துணை சேவைகளைப் பெற்றுக் கொள்ளல் (ஏற்றுமதி - இறக்குமதி வங்கிக் கடன் உடன்படிக்கை இலக்கம் SRI-21)

- மேற்போந்த கருத்திட்டத்திற்கு நிதியிடுவதற்காக கொரிய அரசாங்கத்தினால் 33,536.000 அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு சமமானதும் இந்த தொகையை விஞ்சாத கொரிய வொன் பெறுமதியில் கடன் தொகை வழங்கப்படுவதுடன் இந்த கருத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பு 8,350,000 அமெரிக்க டொலர்களாகும். கருத்திட்டக் கால எல்லை நான்கு (04) வருடங்களாகும். இந்த துப்பரவேற்பாட்டுக் கழிவு நிறுத்திகள் அநுராதபுதரத்தின் கிரிக்குளம், ஹிக்கடுவையின் மொறோவியாவத்த, பாணந்ததுறை மாலமுல்ல மற்றும் உடுநுவர ஹோணாதிகவத்த போன்ற இடங்களில் நிருமாணிக்கப்படவுள்ளதுடன் இது இயைபுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லைக்குள் பெறப்படுகின்ற கழிவு மீதி, கொத்தணி முறை அடிப்படையில் இறுதியாக அகற்றும் பொது வசதியாகவும் செயற்படவுள்ளது. மேற்போந்த கருத்திட்டத்தின் உசாத்துணை சேவைகளுக்கான கேள்விகளை வழங்குவதற்காக சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.