2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை நீர்வாரம் - 2014 மார்ச் 16 ஆம் திகதியிலிருந்து மார்ச் 22 ஆம் திகதி வரை - ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி உலக நீர் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம் 2014 மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை இலங்கையில் நீர் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் இந்த நோக்கத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமாக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |