• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுவட்ட நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - கெரவலப்பிட்டியவில் இருந்து கடவத்தை வரையிலான வடக்குப் பகுதி II சிவில் வேலை ஒப்பந்தங்களின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்கும் பொருட்டு மதியுரைச் சேவைக் கம்பனியொன்றை தெரிவுசெய்தல்

- சுற்றுவட்ட நெடுஞ்சாலை கொட்டாவையில் ஆரம்பித்து கடுவெல, கடவத்தை ஊடாக கெரவலப்பிட்டியவில் முடிவடைகின்றது. இது தெற்கு அதிவேகப் பாதை, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை, பிரேரிக்கப்பட்டுள்ள வடக்கு அதிவேகப் பாதை உட்பட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் தொடர்புபடுத்தப்படும். மேற்போந்த ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.