2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல் - சட்டமா அதிபர் திணைக்களம் சுமார் 80 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடமொன்றில் நடாத்திச் செல்லப்படுவதோடு, கூடிய இடவசதிகளையும் மிகச்சிறந்த வசதிகளையும் வழங்கும் நோக்கத்துடன் திணைக்களம் சார்பில் புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 1.182 மில்லின் ரூபாவைக் கொண்ட செலவில் இந்த திணைக்களத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல், இந்தக் கருத்திட்டத்தை இரண்டு (02) வருடகாலப் பகுதிக்குள் பூர்த்தி செய்தல் அத்துடன் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |