• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேலதிக உணவு பயிர் உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - "நாம் பயிர் செய்வோம்

- நாட்டைக் கட்டியெழுப்புவோம்" உள்நாட்டு உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்பாட்டின் கீழ் இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளமை கவனத்திற்கு எடுக்கப்பட்டதோடு, வருடாந்த நெல் உற்பத்தி 4 மில்லியன் மெற்றிக் தொன்னை விஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாட்டின் வருடாந்த அரிசித் தேவைக்கு அப்பால் தாண்டிச் செல்வதாகும். மேலதிக உணவுப் பயிர்களில் தன்னிறைவை காண்பதற்கும் இறக்குமதியின் பொருட்டு செலவாகும் அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கத்துடனும் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கிழங்கு, மிளகாய், சோளம், உழுந்து, பயறு, சோயாபோஞ்சி, கௌப்பி போன்ற மேலதிக உணவுப் பயிர்களை பயிர்செய்வதற்காக 2014 சிறுபோகத்தில் வயற்காணிகளின் 35 சத வீதமானவற்றை பயன்படுத்துவதற்கும் உரமானியம், சலுகை வட்டி வீதாசாரத்தின் மீது கடன் வழங்கல், உயர் விளைச்சல் கொண்ட வகைகளை அறிமுகப்படுத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.