2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பாலஸ்தீனத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் - 2014 சனவரி 06-07 - உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல் - பாலஸ்தீன அரசாங்கத்தின் அதிமேதகைய சனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கையின் அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2014 சனவரி மாதம் 06 ஆம் 07 ஆம் திகதிகளில் பாலஸ்தீனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பாலஸ்தீன இளைய தலைமுறையினரின் ஆற்றல் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பது சம்பந்தமாக இலங்கை காட்டும் அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டி சுற்றுலாத்தொழில், தாதிச் சேவை உட்பட ஏனைய தொழிற்பயிற்சி மூலம் தேர்ச்சி அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் தொழிற்பயிற்சி நிலையமொன்றை ரமல்லா நகரத்தில் தாபிப்பது சம்பந்தமாக அதிமேதகைய சனாதிபதியினால் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பணிகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு பலம்மிக்க கட்டமைப்பொன்றைத் தாபிக்கும் தேவை இரு தலைவர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, இதற்கமைவாக இலங்கை - பாலஸ்தீன கூட்டு ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கான உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. கைச்சாத்திடப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட இந்த உடன்படிக்கைக்குத் தழுவு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பதில் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு நியோமால் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |